Monday, 1 December 2014

வாழக் கத்துக் கொடுக்காமலே

சில பேரு நம்ம வாழ்க்கையில
திடீர்னு வருவாங்க... 
நம்ம நினைச்சிக் கூடப் பார்க்காத
அளவு சந்தோஷத்தை
அள்ளி அள்ளி கொடுப்பாங்க... 
வாழ்ந்தா இவங்க கூடத் தான் வாழணும்
னு நினைக்கும் போது
திடீர்னு மறைந்திடுவாங்க... 
இத நம்ம விதி ன்னு வேற
சொல்லுவாங்க... 
திரும்ப திரும்ப
தேடினாலும், ஏங்கினாலும்,அழு
தாலும்
கிடைக்கவே மாட்டாங்க...
அவங்க இல்லாம வாழக்
கத்துக்
கொடுக்காமலே போயிடுவாங்க... I

-----------------------------------------------------------
அவள் தொலைந்து
போயிருந்தால் நான்
கவலை படமாட்டேன்
தொலைந்து போனதும்
என் இதயம் தான் ....!!!
நினைவுகளை தராமல்
என் கனவுகளை கெடுக்காமல்
வெறும் இதயத்தை தொலைத்து
இருந்தால் போகட்டும் விடு
என்று விட்டிருப்பேன் ...!!!

கூறன பார்வையால் என்னை
காயப்படுத்தி ....
மென்மையான குரலால் என்னை
சேதப்படுத்தி.....
மயக்கமான மொழியால் என்னை
வசப்படுத்தி ....
இப்போ தனிமையில் என்னை
தவிக்க விட்டு சென்று விட்டால்
தேடுகிறேன் அவளை ....!!!
---------------------------------------------------

ஏமாற்றிவிட்டாய் என் காதலி

ஏமாற்றிவிட்டாய் என்ற கவலையை விடஏமாந்து விட்டேன் என்ற கவலை என்னை 
தினம் தினம் கொல்கிறது. ! 
உண்மையான அன்புக்கு உன்னிடம் 
இடம் இல்லை. .
பொய்யாய் பழகிவிட எனக்கு தெரியவில்லை 
அதனால் கூறுகிறேன் இனியாவது 
உண்மையாய் நடந்து கொள் 
என்னிடம் அல்ல உன்னுடன் இருப்பவர்களிடம். !

----------------------------------------------------------------
அவளுடன் நான் பேசிகொண்டிருந்த
கடைசி நிமிடங்களில் அவள் பேசியதை விட 
அவளது கண்ணீர் அதிகம் பேசியது...!

------------------------------------------------------------------
முயற்சிகள் வெற்றி அடையும் என்று யார் சொன்னது!
அவளை மறக்க நினைக்கும் ஒவ்வொரு நொடியும் 
எனக்கு தோல்வி தான் !
-------------------------------------------------------------------
என்னை விட வேறு யாராலும்
உன்னை அதிகமாக நேசித்து விட
முடியாது
உன்னை விட வேறு யாரையும்
நான் அதிகமாய் நேசிக்க இயலாது
-----------------------------------------------------------------
என்னை விட நல்ல நண்பனை நீ
கண்டுபிடித்தால் என்னைக் கடந்து செல்
நான் உன்னை தடுக்கமாட்டேன் ஆனால்,
அவன் உன்னை விட்டு விலகிச்
சென்றால் பின்னால்
திரும்பி பார்..அங்கே உனக்காக நான்
இருப்பேன்..!
------------------------------------------------------

Friday, 14 February 2014

முத்தம் கவிதைகள் தொகுப்பு


இம்சையே!




ஆயிர‌ம் முறை சொன்னாலும்
அறிவே இல்லை உன‌க்கு என்று
முத்த‌மிடுகையிலெல்லாம்
யுத்த‌மிடுகின்றாய் என்னோடு
ச‌ளைக்காம‌ல் எச்சிலை அழித்து
ச‌த்த‌மில்லாம‌ல் இப்போதாவ‌திடு என்று
உன் க‌ன்ன‌ம் காட்டுகின்றாய்
இம்சையே!
ச‌த்த‌திற்காக‌ யுத்த‌மிடுகிறாயா?
முத்த‌திற்காக‌ ச‌த்த‌மிடுகிறாயா?

பொன் சங்கிலி




உன் இதழில் நனைந்தே
உருகிப்போன
பொன் சங்கிலியின்
புலம்பலை கேட்டதுமுதல்
புலம்பித் தவிக்கின்றது
என் இதழ்கள் – உன்னிடம்
உருகிப்போக!
முத்தமிட்டு..
முத்தமிட்டு…



முத்த மழை.....



சின்ன சின்ன
சண்டைகள்....

அது
நம்மிடம் இருந்து
நம் சிரிப்பினை
தொலைக்க செய்யும்....

சில நாட்கள்
பேசாமல் இருப்போம்

சில நாட்கள்
பார்க்காமல்
இருப்போம்....

ஒரு
வரட்டு
வைராக்கியத்தோடு.....

உனக்கும்
எனக்கும்
மட்டும் அறிந்த
செய்கை பாஷையில்
கேட்டேன்....
"மன்னித்து விடு......"

என்ன
அதிசயம்
உன் வறட்டு
வைராக்கியத்தில்
இத்தனை
முரட்டு காதலை
அடக்கி வைத்தாய் என்று....

முத்த மழை
பொழிந்தது.....
முகம் முழுக்க....

கண்ணீர மழை
பொழிந்தது
தன்னாலே....


சின்ன சின்ன 
சண்டைகள்....

சில நாட்கள்  
பேசாமல் இருப்போம் 

சில நாட்கள் 
பார்க்காமல் 
இருப்போம்....

ஆனால் 
உனக்கும் 
எனக்கும் தெரிய வில்லை 

நம் 
நிரந்தரமாய் 
பிரிவதற்கு 
பழகி கொண்டு 

இருக்கிறோம் என்று.....




---------------------------

முத்தம் என்பது
உதடுகளின் ஒப்பந்தம்
என்று தான் நினைத்திருந்தேன்.
உயிரின்
தீப்பந்தம் என்பது
இப்போது தானடி புரிகிறது.


---------------------------------------